• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விசேட வைப்பு கணக்குகளுக்கு மேலதிக வட்டியினை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்
- வௌிநாட்டு நாணயங்களை நாட்டிற்கு கொண்டுவருவதனை ஊக்கப்படுத்துவதற்காக 2020 ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக விசேட வைப்புக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கும் இந்த கணக்குகளிலுள்ள வைப்புகளை மேலும் தக்க வைத்துக் கொள்வதற்கும் மேலதிக வட்டியினைச் செலுத்துவதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஒழுங்குவிதிகள் வௌியிடப்பட்டுள்ளதோடு, தற்போது நடைமுறையிலுள்ள ஏற்பாடுகளின் கீழ் ஆறு (06) மாத கால அல்லது பன்னிரண்டு (12) மாத கால எல்லைகளுடனான விசேட வைப்பு கணக்குகளில் மீ்ண்டும் முதலீடு செய்வதற்கும் இத்தகைய விசேட வைப்புக் கணக்குகளுக்கு மேலதிக வட்டியினை வழங்குவதற்கும் சாத்தியம் நிலவுகின்றது. ஆயினும் பன்னிரண்டு (12) மாத கால எல்லைக்கு கூடுதலாக மீண்டும் முதலீடு செய்யப்படும் விசேட வைப்புக் கணக்குகளுக்கு மேலதிக வட்டி விகிதாசாரமொன்றினை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லாமையினால் அதன் பொருட்டிலான ஏற்பாடுகளை உள்ளடக்கி 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 7(1) ஆம் பிரிவின் பிரகாரம் ஒழுங்குவிதிகளை விதிப்பதற்கும் இந்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.