2021-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சேதன மற்றும் இயற்கை பசளை உற்பத்தி மற்றும் பாவனையின் முக்கியத்துவம் பற்றி அறியச் செய்விக்கும் தேசிய மட்ட ஊடக நிகழ்ச்சித் திட்டம் - இரசாயன பசளை பாவனைக்கு பதிலாக சேதன மற்றும் இயற்கை பசளையை கமத்தொழில் நோக்கங்களுக்காக பயன்படுத்து வதற்கு அரசாங்கத்தினால் கொள்கைத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இரசாயன பசளையை பயன்படுத்துவது உற்பத்தியினை அதிகரிப்பதற்குள்ள ஒரே மாற்றுவழியாக நம்பும் விவசாயிகள் உட்பட ஏனைய தரப்பினர்களுக்கு இது தொடர்பிலான உண்மை நிலைமையினை புரிய வைத்தல், சேதன பசளை பாவனையை அதிகரிக்கும் பொருட்டு விவசாயிகளிடத்தில் புரிந்துணர்வினை அதிகரித்தல், சேதன மற்றும் இயற்கை பசளை உற்பத்தியின் மேம்பாடும் அதேபோன்று சுற்றாடல் நட்புறவுமிக்க நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அனுசரணை வழங்குதல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் தேவை எழுந்துள்ளது. இதற்கிணங்க விவசாயிகள் மற்றும் இளைய தலைமுறையினர் அடங்கலாக ஏனைய தொடர்புடைய தரப்புகளை அறியச் செய்விப்பதற்கு ஒலி, ஔி, அச்சு, டிஜிட்டல் ஊடகங்களின் மூலம் உரிய அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்காக கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |