2021-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வெலிக்கடை சிறைச்சாலையை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட பீ.சீ.சீ.லங்கா கம்பனிக்குச் சொந்தமான காணியை மீண்டும் உடைமையாக்கிக் கொள்ளல் - வெலிக்கடை சிறைச்சாலையை குறித்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி வரையறுக்கப்பட்ட பீ.சீ.சீ.லங்கா கம்பனிக்குச் சொந்தமான ஏக்கர் 06 றூட் 03 பேர்ச்சஸ் 8.77 விஸ்தீரணமுடைய காணியின் ஒருபகுதிக்கு கொண்டு செல்லும் பொருட்டு 2016 யூன் மாதம் 27 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான ஹொரண பிரதேசத்திலுள்ள காணியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத் தொகுதிக்கு கொண்டு செல்வதற்கு அரசாங்கம் கொள்கைத் தீர்மானமொன்றை எடுத்துள்ளது. இதற்கிணங்க, நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தயாரிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக உரிய காணித் துண்டினை பீ.சீ.சீ.லங்கா கம்பனியின் அபிவிருத்தி நோக்கங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரின் உடன்பாட்டுடன் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |