• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதி அமைச்சின் 2020 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை (இறுதி வரவுசெலவுத்திட்ட நிலைமை பற்றிய அறிக்கை)
- 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரச நிதி முகாமை (பொறுப்புடமை) சட்டத்தின் 13 ஆம் பிரவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஆண்டறிக்கையானது (இறுதி வரவுசெலவுத்திட்ட நிலைமை பற்றிய அறிக்கை) நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்திற்கும் பொது மக்களுக்கும் நிதியாண்டு முடிவடைந்து 05 மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். இதற்கிணங்க,, தயாரிக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையானது 2021 மே மாதம் 31 ஆம் திகதியன்று வௌியிடப்பட்டுள்ளது. COVID - 19 தொற்றுநிலமையின் தாக்கம் மற்றும் இதன் மூலம் பொருளாதார மாற்றங்களுக்கான பாதிப்புகளை குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கலாக அரசாங்க நிதி போக்கு, 2020 ஆம் ஆண்டின் பொருளாதார அபிவிருத்தி, உலக பொருளாதார அபிவிருத்தியும் நாணய துறையும், உள்நாட்டு கேள்வியும் வழங்கலும், முதலீடு மற்றும் சேமிப்பு, வௌிநாட்டு துறையினதும் நிதி துறையினதும் அபிவிருத்தி, பணவீக்கம் போன்ற துறைகளை தழுவி பேரின பொருளாதார மற்றும் சமூக பொருளாதார சுட்டெண்கள் தொடர்பிலான தௌிவுபடுத்தல்கள் இந்த அறிகையின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அரச வருமானம் மற்றும் செலவுகள், காசோட்ட முகாமைத்துவம், வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறைக்கு நிதியிடல் மற்றும் அரச கடன் கட்டமைப்பு என்பன உள்ளடக்கப்பட்டு இறுதி வரவுசெலவுத்திட்ட நிலைமைபற்றிய விரிவான ஆய்வும் மேற்போந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.