• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறு உரித்து நீதிமன்றங்களைத் தாபித்தல்
- சட்ட நடவடிக்கைகளின் தாமதம் காரணமாக கடும் தீர்மானமொன்றை எடுக்க வேண்டியத் தேவை உருவாகியுள்ளமையினால் இதன்பொருட்டு தாக்கத்தினை செலுத்தும் பிரச்சினைகளின்பால் கவனம் செலுத்துவதற்கும் நீதித்துறை செயற்பாட்டிற்கு புத்தூக்கமளித்து வலுவூட்டும் பொருட்டும் திட்டமிடப்பட்டதும் குறியிலக்கினை கொண்டதுமான அணுகுமுறையுடன் கூடிய முழுமையானதும் விரிவானதுமான மறுசீரமைப்பு நீதித் துறைக்குத் தேவையென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஆரம்ப வழக்கு விசாரணைகள் சார்பில் சிறு உரித்து நீதிமன்றங்களை தாபிப்பது சம்பந்தமாக ஆராய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் கலாநிதி (திரு) ருவன் பெர்ணாண்டோ அவர்களின் தலைமையில் நீதி அமைச்சரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பின்வருமாறு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* சிறு உரித்து நீதிமன்றங்களைத் தாபிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்யும் விதத்தில் 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை ஏற்பாட்டுச் சட்டத்தை திருத்துதல்.

* சிறு உரித்து நீதிமன்றங்கள் தொடர்பில் விசேட நடவடிக்கை முறைக்கான ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றினைத் தயாரித்தல்.