• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாகாண சபைகளினால் நிருவகிக்கப்படும் தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் நிருவாகத்தின் கீழ் விருத்தி செய்தல்
- இலங்கை தேசிய வைத்தியசாலையிலுள்ள மருத்துவ சிகிச்சை, சத்திர சிகிச்சை கூடம் மற்றும் இரசாயண கூடம் போன்றவற்றின் வசதிகளுக்கு சமமான வசதிகளை வழங்கி சகல மாவட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலையொன்றை விருத்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மாகாண சபைகளினால் நிருவகிக்கப்படுகின்றதும் மூன்றாம் நிலை சுகாதார சேவை நிறுவன வகுதியின் கீழ் உள்ளதுமான மாத்தளை, நாவலபிட்டி, அவிசாவலை, கம்பஹா, மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளில் அவற்றின் சேவை வழங்கும் தரம், சமத்துவம் மற்றும் வினைத்திறன் என்பவற்றை அதிகரிப்பதற்கும் இலகுவாக நிருவாக பணிகளை மேற்கொள்வதற்குமாக சுகாதார அமைச்சின் நிருவாகத்தின் கீ்ழ் கொண்டுவருவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குறித்த நோக்கங்களை அடைவதற்காக இந்த மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் நிருவாகத்தின் கீழ் கொண்டுவரும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.