• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
துறைமுகத்திலிருந்து விடுவித்துக் கொள்ளப்படாத மற்றும் இலங்கை சுங்கத்தினால் பறிமுதல் செய்யப்படும் அத்தியாவசிய உணவு பொருட்களை வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக சலுகை விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்தல்
- நிலவும் COVID - 19 தொற்று நிலைமையின் கீழ் பொதுமக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை சலுகை விலையில் தட்டுபாடின்றி வழங்கும் வழிமுறையொன்று ஏற்கனவே வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வழிமுறையினை தொடர்ந்தும் வெற்றிகரமாக நடாத்திச் செல்வதற்கு இயலுமாகும் வகையில் இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை சுங்கத்தினால் பறிமுதல் செய்யப்படும் அத்தியாவசிய உணவு பொருட்களை வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு வர்த்தக அமைச்சரினாலும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரினலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.