• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எல்பிட்டிய மஹஹீன்தென்ன பிரதேசத்தில் கமத்தொழில் ஏற்றுமதி அபிவிருத்தி சங்கிலி பெறுமதி கைத்தொழில் வலயமொன்றைத் தாபித்தல்
- கமத்தொழில் ஏற்றுமதி துறையின் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை அதிகரிப்பதன் மூலம் சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கும் உயர் தரத்திலான சந்தைகளில் நுழைவதற்குமான வாய்ப்பு நிலவுகின்றது எனவும் இதன் மூலம் அதிக அந்நிய செலாவணியை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பு நிலவுகின்றதெனவும் இனங்காணப்பட்டுள்ளது. இத்தகைய கருத்திட்டங்களுக்கு வசதிளை செய்யும் பொருட்டு எல்பிட்டிய மஹஹீன்தென்ன பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான 64 ஏக்கர் காணியில் கமத்தொழில் ஏற்றுமதி அபிவிருத்தி சங்கிலி பெறுமதி கைத்தொழில் வலயமொன்றைத் தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்தக் கருத்திட்டத்தின் முதற்கட்டமாக தற்போது செயற்படுத்தப்பட்டுவரும் கமத்தொழில் துறை நவீனமயப்படுத்தல் கருத்திட்டத்தின் கீழ் தொழில்முயற்சியின் சாத்தியம் பற்றி மதிபீடு செய்து, இனங்காணப்பட்டுள்ள 14 கமத்தொழில் தொழில்முயற்சியாளர்களுக்கு கருத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு காணித் துண்டுகளை வழங்குவதற்கும் கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கமத்தொழில் தொழில்முயற்சியாளர்களை தெரிவுசெய்வதற்குமாக விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.