• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நூறு நகரங்களை அழகுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் ('சியக் நகர' நிகழ்ச்சித்திட்டம்)
- முறையற்ற அபிவிருத்தி காரணமாக நாடுமுழுவதுமுள்ள சில இரண்டாம் மூன்றாம் மட்ட நகரங்கள் பல காலமாக ஒழுங்குமுறையற்ற அழகற்ற மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நகரங்களாக காணப்படுகின்றதோடு, இந்த நகரங்களை முறையான திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு அமைவாக தேவையான நடவடிக்கையினை எடுப்பதன் மூலம் பொதுமக்கள் விரும்பும், அழகான நகரங்களாக மாற்றுவதற்கான சாத்தியம் நிலவுகின்றது. இதற்கிணங்க, நாடுமுழுவதுமுள்ள இத்தகைய நூறு நகரங்களை இனங்கண்டு அவற்றின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி இந்த நகரங்களை முறையாக அழுகுபடுத்துவதற்குரிய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் சகல நிறுவனங்களினதும் ஏனைய சகல தரப்பினர்களினதும் ஒத்தாசையுடன் 'சியக் நகர' என்னும் நிகழ்ச்சித்திட்டத்தினை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.