• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு "குரு அபிமானி" கொடுப்பனவினை வழங்குதல்
- 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' அரச கொள்கைப் பிரகடனத்தில் முன்பள்ளி ஆசிரியர்கள் மனிதவள அபிவிருத்தியின் பிரதான தரப்பொன்றாக இனங்கண்டு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஏதேனும் திட்டவட்டமான பயிற்சியினை வழங்கியதன் பின்னர் அவர்களுக்கு நிலையான கொடுப்பனவொன்றை வழங்குவது சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது செலுத்தப்படும் 250 ரூபாவைக் கொண்ட மாதாந்த கொடுப்பனவை 2,500/- ரூபாவாக அதிகரிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2021 யூன் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் செயல்வலுவுக்கு வரத்தக்கதாக அரசாங்கத்தினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது செலுத்தப்படும் 250 ரூபாவைக் கொண்ட மாதாந்த கொடுப்பனவை இனங்காணப்பட்ட தகவுதிறன்களின் அடிப்படையில் தகைமை பெறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500/- ரூபா வரை அதிகரிப்பதற்கும் இதன் முதற்கட்டமாக 25,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தக் கொடுப்பனவினை வழங்குவதற்குமாக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.