2021-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் - கமத்தொழில் உற்பத்திகளுக்கு சேதன பசளை பாவனையை மேம்படுத்தும் நோக்கில் இரசாயன பசளை, கிருமிநாசினி மற்றும் களைக்கொல்லி என்பவற்றின் இறக்குமதியை தடை செய்வதற்கு 2021 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிணங்க இந்த அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரியதாக 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெயிடப்பட்டுள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |