• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அத்துருகிரிய இடைமாறல் மற்றும் புதிய களனிய பாலத்தை இணைத்து தூண்களின் மீது நிர்மாணிக்கப்படும் அதிவேகப் பாதையினை நிர்மாணித்தல்
- அத்துருகிரிய இடைமாறல் மற்றும் புதிய களனிய பாலத்தை இணைத்து தூண்களின் மீது நிர்மாணிக்கப்படும் அதிவேகப் பாதையினை நிர்மாணித்து நடாத்திச்சென்று கையளிக்கும் அடிப்படையில் நடைமுறைப் படுத்துவதற்கு 2020‑04‑08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டம் சார்பில் உரிய முதலீட்டாளர்களிடமிருந்து தொழினுட்ப, நிதி பிரேரிப்புகளை உள்ளடக்கிய விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு M/s. China Harbor Engineering Corporation கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.