2021-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
COVID - 19 அவசர கொள்வனவு செயற்பாட்டிற்கான வழிகாட்டல்களை அறிமுகப்படுத்துதல் - தற்போது நிலவும் COVID - 19 தொற்று நிலைமை காரணமாக சுகாதார துறைக்குரியதாக சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இந்த அமைச்சுக்களின் கீழுள்ள இராஜாங்க அமைச்சுக்கள் என்பவற்றுக்கு அத்தியாவசியப் பொருட்களை தாமதமின்றி பெற்றுக் கொள்வதற்கு தற்போது நடைமுறையிலுள்ள கொள்வனவு செயற்பாடுகளை எளிமையாக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தடுப்பூசி, மருத்துவ உபகரணங்கள், ஏனைய மருத்துவ தேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றை துரிதமாக கொள்வனவு செய்வதற்கு இயலுமாகும் வகையில் தற்போது நடைமுறையிலுள்ள கொள்வனவு நடவடிக்கைமுறையை திருத்தி புதிய வழிகாட்டல்களை அறிமுகப்படுத்தும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |