• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காணி சுவீகரித்தல் (நட்டஈடு செலுத்துதல்) ஒழுங்குவிதிகளைத் திருத்துதல் - 2013
- இனங்காணப்பட்ட 20 கருத்திட்டங்கள் சார்பில் காணி சுவீகரித்தல் மற்றும் மீள் குடியமர்த்தல் குழு (LARC) மற்றும் காணி சுவீகரித்தல் மற்றும் மீள் குடியமர்த்தல் விசேட குழு (SUPER LARC) நடவடிக்கைமுறையின் கீழ் நட்டஈடு செலுத்துவவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு காணி கொள்ளல் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் ஒழுங்குவிதிகள் ஆக்கப்பட்டுள்ளன. பின்வரும் கருத்திட்டங்கள் சார்பில் சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு நட்டஈடு செலுத்தும் பொருட்டும் இதே வழிமுறையினைப் பின்பற்றுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

* கொழும்பு தலைநகர் சார்ந்த நகர அபிவிருத்தி கருத்திட்டம்.

* தம்புள்ளை ஊடாக குருநாகலிருந்து ஹபரணை வரையிலான புகையிரதப் பாதை கருத்திட்டம்

* திறமுறை நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்

* ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியின் கீழ் நெய்யறி உபநிலையங்கள் மற்றும் அனுப்பீட்டு கம்பி வழிகள் கருத்திட்டம்.

இதற்கிணங்க, 2018 மார்ச் மாதம் 18 ஆம் திகதியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள காணி சுவீகரித்தல் (நட்டஈடு செலுத்துதல்) திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.