2021-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பசுமை தொழில்முயற்சி ஊக்குவிப்பின் ஊடாக சுற்றாடல் பாதுகாப்பு - 'சுபீட்சத்தின் நோக்கு' தேசிய கொள்கை பிரகடனத்தின் மூலம் நாட்டின் மொத்த வன அளவினை 30 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு பிரேரிப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, ஏற்கனவே சுற்றாடல் அமைச்சின் கீழ் 'சுரக்கிமு கங்கா' தேசிய சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டமும் ' ஹுஷ்ம தென துரு' என்னும் மர நடுகை நிகழ்ச்சித்திட்டமும் நாடு முழுவதும் அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை, அரசசார்பற்ற அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் அடங்கலாக பல்வேறு தரப்புகளின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டங்களுக்குத் தேவையான கன்றுகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டும் கிராமிய மக்களை ஊக்குவித்து பசுமை தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கிலும் இலங்கை முழுவதும் புதிதாக 650 நாற்றுமேடை செய்கையாளர்களை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் குறைந்த வருமானம் பெறும் 650 குடும்பங்களை நாற்றுமேடை செய்கையாளர்களாக பசுமை தொழில்முயற்சியாளர்களாக செயலாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கும் பொருட்டு சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |