2021-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியொன்றை கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ நிறுவகத்திற்கு உடைமையாக்கி கொள்ளல் - கொழும்பு - 08, கலாநிதி என்.எம்.பெரேரா மாவத்தை, 330 ஆம் இலக்க மனையிடத்தில் அமைந்துள்ள 0.1765 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணித்துண்டை சுதேச மருத்துவ நிறுவகத்திற்கு உடைமையாக்குவதற்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை திறன் அபிவிருத்தி ஆய்வுகூடம், கற்கை மண்டபம், இலங்கையின் பாரம்பரிய உணவுகளைத் தயாரிப்பதற்கு பயிற்றுவிக்கும் நிலையம் மற்றும் சிற்றுண்டிச்சாலை அடங்கலாக எட்டு மாடிகளைக் கொண்ட பல்பணி கட்டடத் தொகுதியொன்றை இந்தக் காணியில் நிர்மாணிப்பதற்கு சுதேச மருத்துவ நிறுவனத்தின் முகாமைத்துவ சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அதன் பொருட்டு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் உடன்பாடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க உரிய காணித் துண்டை கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ நிறுவகத்திற்கு உடைமையாக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |