2021-05-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வெலிக்கடை சிறைச்சாலை கட்டடத்தொகுதியை ஹொரண, மில்லாவைக்கு இடம் நகர்த்துதலும் வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள காணியை கலப்பு நகர அபிவிருத்தி கருத்திட்டமொன்றுக்காக பயன்படுத்துதலும் - சுமார் 42 ஏக்கர்கள் விஸ்தீரணமுடைய காணியில் அமைந்துள்ள வெலிக்கடை சிறைச்சாலை கட்டடத்தொகுதியை ஹொரணயிலுள்ள மில்லாவ வத்த என்னும் சுமார் 200 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியில் மீளமைப்ப தற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்கால தேவைகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த காணியில் புதிய சிறைச்சாலை கட்டடத்தொகுதியை நிர்மாணிப்பதற்கும் தற்போது வெலிக்கடை சிறைச்சாலை நடாத்திச் செல்லப்படும் காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கி முறையாக தெரிவு செய்யப்படும் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்து வதற்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினாலும் நீதி அமைச்சரினாலும் கூட்டாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |