2021-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் - 2019 மார் மாதம் 06 ஆம் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்படுகின்ற 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு கூடுதலான முதலீட்டுடன் கூடிய எந்தவொரு கருத்திட்டம் சார்பிலும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தக் கருத்திட்டத்தின் வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் செஸ் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. ஆயினும், சில பாரிய அளவிலான கருத்திட்டங்கள் அவற்றின் மொத்த கருத்திட்டத்தையும் பூரத்தி செய்வதற்கு முன்னர் கட்டம் கட்டமாக வரத்தக செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றமையினால் இத்தகைய கருத்திட்டங்களுக்கு செஸ் வரியிலிருந்து விலக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. ஆதலால் இத்தகைய கருத்திட்டங்களையும் செஸ் வரியிலிருந்து விலக்களிக்கும் விதத்தில் ஏற்பாடுகளை செய்து, 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ள 2021 மார்ச் மாதம் 17 ஆம் திகதியிடப்பட்டதும் 2219/36 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |