• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மகாவலி அதிகாரசபையினால் நிருவகிக்கப்படும் நீர்த்தேக்கங்களின் தூர்வாரும் கருத்திட்டம்
- மகாவலி நீர்த்தேக்கங்களை நிர்மாணிப்பதற்கான அடிப்படை நோக்கங்களில் குடிநீர் வழங்குதல், கமத்தொழிலுக்கு நீர் வழங்குதல், மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்த பிரதான நீர்த்தேக்கங்கள் பலவற்றில் சேரு படிந்துள்ளதன் காரணமாக அவற்றின் கொள்ளளவு கணிசமான மட்டத்தில் குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்த நீர்த்தேக்கங்களின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவது கடினமாகமாறியுள்ளது. தூர்வாருவதற்கும் இவற்றை வகுப்பீடு செய்து பயன்பாட்டுக்கு ஏற்றவாறு தயாரிப்பதற்குமான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பொல்கொல்ல, விக்டோரியா, ரந்தெனிகல, ரன்டெம்பே, கலாவெவ மற்றும் போவதென்ன நீர்த்தேக்கங்கள் சார்பில் உரிய சகல விடயங்களையும் உள்ளடக்கி தேவையான அளவைப் பணிகளையும் தரவுகளையும் பெற்றுக் கொண்டு, அடிப்படை சாத்தியத் தகவாய்வு அறிக்கையொன்றை தயாரிப்பதற்கு உள்நாட்டில் அல்லது சருவதேச ரீதியில் மதியுரைச் சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கும் அதற்கிணங்க தயாரிக்கப்படும் சாத்தியத்தகவாய்வறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு இந்த நீர்த்தேக்கங்களில் தூர்வாருவதற்கு பொருத்தமான நிறுவனமொன்றை தெரிவு செய்வதற்கு உள்நாட்டில் அல்லது சருவதேச ரீதியில் போட்டி கேள்வி கோருவதற்குமாக நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.