2021-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
COVID - 19 தொற்று நிலைமையின் கீழ் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் பேருந்து போக்குவரத்து சேவைகளைத் தொடர்வதற்கு நிவாரணம் வழங்குதல் - COVID - 19 தொற்று நிலைமையின் கீழ் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் பேருந்து போக்குவரத்து சேவைகளைத் தொடர்வதற்கு இனங்காணப்பட்ட சலுகைகள் 2021 மார்ச் மாதம் 31 ஆம் திகதிவரை வழங்கும் பொருட்டு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. COVID - 19 தொற்று நிலைமை தொடர்ந்தும் காணப்படுவதனால் பேருந்து போக்குவரத்து சேவை முறையாக நடைபெறாமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 2021 ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 2021 திசெம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை பின்வரும் சலுகைகளை பேருந்து போக்குவரத்து சேவைகளை வழங்குபவர்களுக்கு ஏற்பாடு செய்யும் பொருட்டு போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
* வருடாந்த கேள்வி கட்டணத்திலிருந்து 50 சதவீதத்தினை மாத்திரம் அறவிடுதல். * அதிவேகப் பாதைக்கான தற்காலிக அனுமதிப்பத்திர கட்டணத்திலிருந்து 50 சதவீதத்தினை மாத்திரம் அறவிடுதல். |