2021-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
COVID - 19 தொற்றின் மூன்றாவது அலை நிகழும் இந்த காலப்பகுதியில் PCR பரிசோதனைகளை அதிகரித்தல் - COVID புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டதும் அரசாங்கத்தின் இரசாயன கூடங்களில் COVID PCR பரிசோதனை அதிகரித்துள்ளதோடு மேலும் அதிகரிக்கும போக்கினை காட்டுகின்றது. ஆதலால் தேவைக்கு ஏற்ற விதத்தில் PCR பரிசோதனை மேற்கொள்வதற்குத் தேவையான கருவிகளையும் துணை கருவிகளையும் துரிதமாக கொள்வனவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |