• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மக்கள் சீன குடியரசின் வைட் ஹோஸ் விகாரை மனையிடத்தில் இலங்கையின் பாரம்பரிய பௌத்த விகாரையொன்றை நிர்மாணித்தல்
- மக்கள் சீன குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் நீண்டகால இராஜதந்திர உறவுகளை விருத்தி செய்துகொள்வதற்கு உலக பௌத்த மக்களின் வழிபாட்டுக்காக எனது நாட்டின் பாரம்பரிய பௌத்த விகாரையொன்றை மக்கள் சீன குடியரசின் வைட் ஹோஸ் விகாரை மனையிடத்தில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. உத்தேச நிர்மாணிப்பு பணிகளுக்கான சகல நிதியும் வைட் ஹோஸ் விகாரையினால் ஏற்கப்பட வுள்ளதோடு, இந்த நிர்மாணிப்புகள் இலங்கையின் புத்தசாசன விடயத்திற்கு பொறுப்பான அமைச்சின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும். இதற்கிணங்க இந்த நோக்கத்திற்காக மக்கள் சீன குடியரசின் வைட் ஹோஸ் விகாரைக்கும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.