2021-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பொய்யான பிரச்சாரங்கள் மற்றும் கையாளுதல்களுக்கு பாதுகாப்பு பெறும் சட்டமூலம் - இணையத்தளம் ஊடாக பொய்யான தகவல்களை பிரச்சாரப்படுத்துதல் கடும் அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளதோடு, இந்த நிலைமை சமூகங்களிடையே பிரிவினை ஏற்படுத்துவதற்கு வெறுப்புணர்வினை பரப்புவதற்கு மற்றும் சனநாயக நிறுவனங்களை பலம்குன்றச் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றமை தெரியவந்துள்ளது. இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பல நாடுகள் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பொய்யான பிரச்சாரங்கள் காரணமாக நிகழும் பாதிப்புகளிலிருந்து சமூகத்தை பாதுகாக்கும் பொருட்டு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரசைகளுக்கும் சிலில் சமூகத்திற்கும் உண்மையான தகவல்களை அனுகக்கூடிய வாய்ப்பினை வழங்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்படவேண்டியுள்ளது. இதற்கிணங்க உரிய நோக்கம் கருதி சட்டமூலமொன்றை ஆக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு வெகுசன ஊடக அமைச்சரினாலும் நீதி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |