2021-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாடசாலை சீருடைத் துணிகளை கொள்வனவு செய்தல் - 2022 - 2022 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணிகளை 2021 ஆம் ஆண்டின் இறுதி பாடசாலை தவணை நிறைவடைவதற்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவித்து பாடசாலை சீருடைத் துணிகளை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யவேண்டுமென ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, இதற்கிணங்க நடவடிக்கை எடுத்து கைத்தொழில் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள உள்நாட்டு துணி உற்பத்தியாளர்களிடமிருந்து விலை கோரி பொருத்தமான வழங்குநர்களை தெரிவு செய்யும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |