• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'தருன கேந்திர' - உயர் விளைதிறன் கொண்ட இளைஞர் சமூக நிலையங்களைத் தாபிக்கும் கருத்திட்டம்
- இலங்கையில் இளைஞர் சமூகத்தினர்களுக்கு அவர்களுடைய கருத்துக்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் பயனுள்ள சமூக வாழ்க்கையினை கொண்டு செல்வதற்கு அவர்கள் முகங்கொடுக்கும் கல்வி, சுகாதார, சிவில் மற்றும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலமும் இணக்கப்பாடுகள் மூலமும் தீர்வுகளை கண்டறிவதற்கு தற்போதுள்ள வசதிகள் போதாதுள்ளது. முக்கியமாக இத்தகைய பணிகள் சார்பில் ஒழுங்குகளை செய்வதற்கு, சுயமாக ஈடுபடுவதற்கு பிரதேச மட்டத்தில் நிலவும் வாய்ப்புகளும் இடவசதிகளும் வரையறுக்கப் பட்டுள்ளது. இந்த நிலைமைக்கு மாற்றுவழியாக இளைஞர் சமூகத்தினர்களுக்க அவர்களுக்கு பழக்கமான சூழலில் கூடி அனுபவங்களை பரிமாறிக்கொண்டு காலத்தை பயனுள்ளதாக பயன்படுத்துவதற்கு பொருத்தமான இடங்களை நிர்மாணிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதன் பொருட்டு மாவட்ட அல்லது பிரதேச மட்டத்தில் போதுமான இடவசதியுள்ளதும் பயன்படுத்தப்படாததுமான அரசாங்க பாடசாலைகள் அல்லது பிற கட்டடங்களை இனங்கண்டு பல்வேறுபட்ட வாய்க்கயைும் செயற்பாடுகளையும் உருவாக்கும் உயர் விளைதிறன் கொண்ட இளைஞர் சமூக நிலையங்களைத் தாபிக்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய நிலையமொன்றில் இளைஞர் அபிவிருத்தி வலயம், இளைஞர் பொழுதுபோக்கு வலயம், பொருளாதார வலயம் மற்றும பசுமை வலயம் என்னும் நான்கு (04) வலயங்களில் பல்வேறுபட்ட செயற்பாடுகளுக்கான வசதிகளைச் செய்து அரசாங்க மற்றும் தனியார் கூட்டு கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்தி ஐந்து (05) வருட காலப்பகுதிக்குள் நாட்டின சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இளைஞர் சமூக நிலையங்களை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க கட்டம் கட்டமாக இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் முதலாம் கட்டத்தின் கீழ் சகல மாவட்டங்களையும் தழுவும் விதத்தில் இத்தகைய 25 நிலையங்களை தாபிப்பதற்குமாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.