2021-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் தென் கொரிய குடியரசின் Sungkyunkwan பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை செய்து கொள்ளல் - நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூலக்கூறு விஞ்ஞானம் தொடர்பில் உள்வாரி பட்ட பாடநெறி அபிவிருத்தியில் ஒத்துழைப்பினை மேம்படுத்துதல் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு ஒத்தாசை நல்குதல் இரண்டாம் நிலை மற்றும் கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்கு புத்தாக்க ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டங்களைத் திட்டமிடுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் மூலம் இரு தரப்புக்கும் இடையில் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் மூலக்கூறு விஞ்ஞானம் ஆகிய துறைகளில் கல்வி மற்றும் கலாசார பரிமாறல்கள் சார்பில் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் தென் கொரிய குடியரசின் Sungkyunkwan பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க உரிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |