• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-04-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் 'விசேட வைப்பு கணக்குகளை' ஆரம்பிப்பதற்கென வழங்கப்பட்டுள்ள கால எல்லையை மேலும் நீடித்தல்
- வௌிநாட்டு நாணயங்களை நாட்டிற்குள் கொண்டு வருவதனை ஊக்குவிப்பதற்காக 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக 'விசேட வைப்பு கணக்குகளை' ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் உரிய ஒழுங்குவிதிகள் வௌியிடப்பட்,டுள்ளன. அதேபோன்று இந்த கணக்குகளிலுள்ள வைப்புகளை தொடர்ந்து தேக்கிவைத்துக்கொள்ளும் நோக்கில் மேலதிக வட்டியொன்றை செலுத்துவதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2021 மார்ச் மாதமளவில் இந்த வைப்பு கணக்குகளில் 360.3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வைப்புச் செய்யப்பட்டுள்ளன. இந்த விசேட வைப்பு கணக்குளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த கால எல்லை 2021 ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளமையினால் தொடர்ந்தும் நிதியினை வைப்பிலிடுவதற்கு விரும்பும் தரப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு உரிய கால எல்லையை மேலும் நீடிக்கும் பொருட்டும் இதற்கிணங்க அந்நிய செலாவணி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் ஒழுங்குவிதிகளை வௌியிடும் பொருட்டும் நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.