• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-04-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேயிலைச் செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு தற்போது செலுத்தப்படும் மானியத் தொகையைத் திருத்துதல்
- 2019 ஆம் ஆண்டில் மொத்த தேயிலை உற்பத்தியானது 300 மில்லியன் கிலோகிராம்கள் ஆகும். இதில் 75 சதவீதமான சுமார் 225 மில்லியன் கிலோகிராம்கள் சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களினால் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேயிலை உற்பத்தியை உயர் மட்டத்தில் பேணுவதற்கு சிறிய தேயிலைத்தோட்டங்களின் விளைவு பெருக்கத்தை அதிகரிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. தேயிலை மீள் செய்கையின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு சுமார் 4 வருட காலம் செல்வதும் இதன் பொருட்டிலான செலவு அதிகமானதாலும் மீள் செய்கைக்கும் புதிய செய்கைக்கும் காட்டும் ஊக்கம் போதுமானதாக இல்லாமையினால் 2025 ஆம் ஆண்டளவில் 360 மில்லியன் கிலோகிராம்கள் தேயிலை உற்பத்தி குறியிலக்கினை அடைவதற்கு போதுமான ஊக்குவிப்பு வழங்கப்படவேண்டியுள்ளது. இதற்கிணங்க தேயிலை மீள் செய்கைக்கான மானியத் தொகையை ஹெக்டயார் ஒன்றுக்கு 400,000/- ரூபாவிலிருந்து 500,000/- ரூபாவரை அதிகரிக்கும் பொருட்டு பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.