• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-04-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையங்களைத் திறத்தல்
- விவசாயிகளின் கமத்தொழில் உற்பத்திகளை நேரடியாக விற்பனை செய்வதற்கும் போட்டிகரமான நிலைமையின் மூலம் வினைத்திறன் மிக்க விலைப் பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் விசேட பொருளாதார மத்திய நிலைய வேலைத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே இத்தகைய 15 பொருளாதார மத்திய நிலையங்கள் நாடுமுழுவதும் இயங்குகின்றன. இதற்கிணங்க மட்டக்களப்பு, வவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளதோடு, யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் முதலாம் கட்டத்திற்கான நிர்மாணிப்பு பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்வாகத்திற்கென முகாமைத்துவ நம்பிக்கை பொறுப்பினை தாபிப்பதற்கும் முறையான வழிமுறையொன்றினைப் பின்பற்றி இந்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் வர்த்தக இடங்களை குறித்தொதுக்குவதற்குமாக கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.