2021-04-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய சுவடிகள் காப்பகத்தில் நம்பகரமான டிஜிட்டல் களஞ்சியத்தை தாபித்தல் - 1640 ஆம் ஆண்டிலிருந்து ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலத்திலும் சுதந்திரத்தின் பின்னரும் படைப்புக்களான பெறுமதிமிக்க ஆவணங்களையும் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து வௌியிடப்பட்ட பத்திரிகைகள் அடங்கலாக சகல வௌியீடுகளும் சட்டபூர்வமாக தேசிய சுவடிகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் நாளாந்தம் பாரிய அளவில் ஆவணங்கள் சேர்கின்றதோடு, அவற்றில் டிஜிட்டல் வௌியீடுகள் மற்றும் ஆவணங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி ஔிபரப்புகள், இணையத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் போன்றவையும் உள்ளடங்கும். இதற்கிணங்க இந்த டிஜிட்டல் ஆவணங்களின் நம்பகத் தன்மையையும் உண்மைத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்காக டிஜிட்டல் பாதுகாப்புத் தொடர்பிலான சர்வதேச தரங்களை பின்பற்றி டிஜிட்டல் களஞ்சியமொன்றைத் தாபிக்கும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |