• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவைக்கான திருத்தம்
- அண்மைக்காலத்தில் வாகன விபத்துக்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இத்தகைய விபத்தொன்றின் காரணமாக நிவாரணங்களை பெற்றுக் கொள்வதற்கு சிவில் நீதிமன்றமொன்றில் வழக்கொன்றினைத் தொடுக்க வேண்டும். இதன் போது பாதிக்கப்பட்டவரினால் அல்லது அவருடைய உரிமையாளரினால் சட்டபூர்வமான மருத்துவ அறிக்கை உட்பட ஏனைய மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்பதோடு, அவை கட்டாயமாக "எண்பிப்பதற்கு உட்பட்டு" என்னும் அறிக்கைகளாக கருதப்படும். இந்த அறிக்கைகளிலுள்ள விடயங்களை எண்பிக்கும் பொருட்டு சாட்சியளிப்பதற்காக மருத்துவ உத்தியோகத்தர் நீதிமன்றத்தில் தோற்றுவாரென உறுதிப்படுத்திக் கொள்வது பாதிக்கப்பட்டவருக்கு அல்லது அவரின் பாதுகாவளருக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. இத்தகைய வாகன விபத்தின் வழக்கொன்றினை முடிவுறுத்துவதற்கு 10 தொடக்கம் 12 வருட காலம் எடுக்கப்படுகின்றமையினால் குறித்த மருத்துவ உத்தியோகத்தர் தூர பிரதேசமொன்றில் சேவையாற்றுவாராயின் அவரை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்கு அரசாங்கத்திற்கு தேவையற்ற செலவினை ஏற்பதற்கு நேரிடுகின்றதோடு, அவருடைய பெறுமதியான நேரத்தை தொழில் சார்பில் பயன்படுத்தும் வாய்ப்பும் இல்லாமற் போகின்றது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, சட்டபூர்வமான மருத்துவ அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நோயாளியின் தலைமாட்டு அட்டை என்பன முதற்தோற்ற அளவில் சாட்சிகளாக கருதுவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர் உடன்படாதவிடத்து மருத்துவ சாட்சிகள் பிழையாவையென எண்பிக்கும் பொறுப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு கையளிக்கப்படும் விதத்தில் ஏற்பாடு செய்வதற்கும் இயலுமாகும் வகையில் குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையைத் திருத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.