2021-03-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய குடிநீர் சமூக அபிவிருத்தி சட்டத்தைத் தயாரித்தல் - தேசிய சமூக நீர்வழங்கல் அபிவிருத்தி திணைக்களம் தாபிக்கப்பட்டதன் பின்னர் மக்களால் முகாமிக்கப்படும் சமூகம் சார் அமைப்புகளை ஒழுங்குறுத்துவதும் பலப்படுத்துவதும் இந்த திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இருப்பினும் இதற்குத் தேவையான சட்ட அதிகாரம் இந்த திணைக்களத்திற்கு இல்லாததன் காரணமாக பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தேசிய சமூக நீர்வழங்கல் அபிவிருத்தி திணைக்களத்தின் பணிகளை முறையாகவும் பயனுள்ள வகையிலும் நிறைவேற்றுவதற்கு இயலுமாகும் வகையில் தேசிய குடிநீர் சமூக அபிவிருத்தி சட்டத்தைத் தயாரிக்கும் பொருட்டு நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |