2021-03-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெற்றோலிய பொருட்களை நுகர்வோருக்கு அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு முறைமையொன்றை அறிமுகப்படுத்துதல் - பெற்றோலிய கைத்தொழிலுக்குரிய சகல செயற்பாடுகளுக்குமான பொறுப்புகள் ஆரம்ப கட்டத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கப்பட்டிருந்தது. ஆயினும் பல்வேறு தரப்புகள் இந்த செயற்பாடுகளில் தற்போது ஈடுபட்டுள்ளன. பெற்றோலிய கைத்தொழிலை ஒழுங்குறுத்தும் நிறுவனமாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்த போதிலும் இந்த நிறுவனத்தின் பணியானது உராய்வு நீக்கி எண்ணெய் தொழிலின் கொள்கை மற்றும் ஒழுங்குறுத்துகைக்குரியதாக அமைச்சுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் ஒத்துழைப்பு நல்குவதற்கும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலமையின் கீழ் பெற்றோலிய பொருட்களின் நுகர்வு உரிமையினை பாதுகாப்பதற்கு நடைமுறை ரீதியிலான வழிமுறையொன்று தாபிக்கப்படவில்லை. ஆதலால் நுகர்வோர்களின் முறைபாடுகளை பொறுப்பேற்பதற்கும் தீர்ப்பதற்குமாக சுயாதீனமானதும் வௌிப்படைத்தன்மை வாய்ந்ததுமான பொறிமுறையொன்றினை வலுசக்தி அமைச்சினதும் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினதும் மேற்பார்வையின் கீழ் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தேச பொறிமுறையினை நடைமுறைப்படுத்தும் போது இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு, நுகர்வோர் அலுவல்கள் பற்றிய அதிகாரசபை, இலங்கை சுங்கம், இலங்கை பொலிஸ், இலங்கை கட்டளைகள் நிறுவனம், கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் உரிய பிற உரிய அரசாங்க நிறுவனங்களும் தொடர்புபடும். இதற்கிணங்க, வரையப்பட்டுள்ள 'நுகர்வோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனம்' மற்றும் 'முறைப்பாடுகளை கையாளுதல் மற்றும் பிணக்குகளைத் தீர்த்தல் நடவடிக்கை முறை' என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் உரிய அரசாங்க நிறுவனங்களுடன் இது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடுவதற்குமாக வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |