2021-03-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து கைத்தொழில்களை தாபிப்பதற்காக காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல் - பிராந்திய கைத்தொழில் சேவைகள் குழுக்களினாலும் கைத்தொழில் அமைச்சின் கருத்திட்ட மதிப்பீட்டு குழுவினாலும் நாலந்த (மாத்தளை) , பட்டஅத்த, கரந்தெனிய, உடுகவ, அம்பிலிபிட்டிய, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் நவகம்புற ஆகிய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து 09 காணித் துண்டுகளை புதிதாக 16 கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிப்பதற்காக முதலீட்டாளர்களுக்கு குறித்தொதுக்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 35 வருடகால குத்தகை அடிப்படையில் 'பிற தரப்பினருக்கு உடமை மாற்றமுடியாது' என்னும் நிபந்தனை மற்றும் உரிய ஏனைய நிபந்தனைகளின்மீது உரிய காணித் துண்டுகளை குறித்தொதுக்கும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |