• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை மேம்படுத்துவதற்காக இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் சேவை வசதிகளைப் பெற்றுக் கொள்ளல்
- மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் சேவைகளை நாடி அதன் தலைமை அலுவலகத்திற்கும், வேரஹெர அலுவலகத்திற்கும் மாவட்ட மட்டத்திலுள்ள அலுவலகங்களுக்கும் நாளொன்றில் பாரிய அளவில் சேவை நாடுநர்கள் வருகைத்தருவர். இதன்காரணமாக சேவை பெறுநர்களும் அதே போன்று திணைக்கள ஊழியர்களும் சில சந்தர்ப்பங்களில் இன்னல்களுக்கு ஆளாகின்றமையினால் இந்த நிலைமைக்கு மாற்று வழியாக முன்னதாகவே தமது சேவைகளுக்கான நேரங்களை ஒதுக்கிக் கொள்தல், இதன் பொருட்டு இலக்கமொன்றைப் பெற்றுக் கொள்தல், சேவையின் தேவைக்கு ஏற்ப உரிய பிரிவினை நாடுவதற்கு வழிகாட்டுதல், குறுஞ் செய்திகள் மூலம் உரிய தகவல்களை சேவை பெறுநர்களுக்கு அறிவித்தல் போன்ற பணிகளுக்காக நவீன தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி மாற்று வழிகளை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை இலங்கை ரெலிகொம் நிறுவனத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்கும் முதலாம் கட்டத்தின் கீழ் இந்தக் கருத்திட்டத்தை நாரஹேன்பிட்ட, வேரஹெர மற்றும் இணைய வசதிகள் கொண்ட 5 மாவட்ட அலுவலகங்கள் என்பவற்றில் நடைமுறைப்படுத்துவதற்கும் கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மீதி மாவட்ட அலுவலகங்கள் 19 சார்பில் கருத்திட்டத்தினை விரிவுபடுத்து வதற்குமாக போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.