2021-03-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் கனடாவின் சர்வதேச அபிவிருத்தி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையில் ஒத்துழைப்பு உடன்படிக்கை யொன்றைச் செய்துகொள்ளல் - COVID - 19 தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கும் அதனால் ஏற்படும் சேதத்தை குறைத்துக் கொள்வதற்கும் நாடுகள் பல்வேறுபட்ட மூலோபாய நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றன. ஆயினும், இதன்போது சில நாடுகள் பின்பற்றிய பல்வேறுபட்ட மூலோபாயங்கள் காரணமாக பெண்கள், சிறுவர்கள் மற்றும் குறைந்த சலுகை கொண்ட சமூக குழுக்கள் என்பவற்றின்பால் உருவாகும் தாக்கங்கள் சம்பந்தமாக ஆராய்ச்சி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இலங்கை மற்றும் மலேசியா என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் கனடாவின் சர்வதேச அபிவிருத்தி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையில் ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |