• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021 ஆம் ஆண்டில் வௌ்ளப்பெருக்கு கட்டுப்பாட்டு கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- கொழும்பு மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களிலும் கொழும்புக்கு வௌியில் அமைந்துள்ள பிரதேசங்களிலும் ஏற்படும் வௌ்ளப்பெருக்கினை குறைப்பதற்கும் சுற்றாடல் ரீதியில் நிலையான நகரமயப்படுத்தலை உறுதி செய்வதற்குமாக 2021 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய வௌ்ளப்பெருக்கு கட்டுப்பாட்டு கருத்திட்டங்கள் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு சார்பில் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 2,800 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டின் மூலம் இந்தக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.