2021-03-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
e-கிராம உத்தியோகத்தர் கருத்திட்டம் - கிராம உத்தியோகத்தர்கள் மக்களுக்கு வழங்கும் சேவைகள் சார்ந்து அன்றாட கடமைகளுக்குத் தேவைப்படும் தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தேவையான தரவு முறைமையொன்றை தயாரிக்கும் பொருட்டு "e-கிராம உத்தியோகத்தர் கருத்திட்டமானது" செயற்படுத்தப்படுகின்றது. 2016 ஆம் 2017 ஆம் ஆண்டுகளில் 04 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 162 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட முன்னோடி கருத்திட்டத்தின் பெறுபேற்றின் அடிப்படையில் இரண்டாம் கட்டத்தின் கீழ் 7,000 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க, இலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப முகவராண்மையின் மதியுரை ஒத்துழைப்பின் கீழ் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |