• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலஞ்சென்ற இலங்கை அமரபுர மஹா நிக்காயாவின் உத்தரீத்தர மஹாநாயக்க கொட்டுகொட தம்மாவாச மஹாநாயக்க தேரோ அவர்களின் இறுதி கிரியை
- காலஞ்சென்ற இலங்கை அமரபுர மஹா நிக்காயாவின் உத்தரீத்தர மஹாநாயக்க தர்மபால வன்சாலங்கார சத்தர்ம கீ்ர்த்தி ஶ்ரீ திரிபீடக விஷாரத பிரவசன கீ்ர்த்தி ஶ்ரீ சாசன ஷோபன ஶ்ரீ சுமங்கல வித்யாவதங்ச அதிவணக்கத்திற்குரிய அக்கமஹா பண்டித மஹோபாத்தியாய கொட்டுகொட தம்மாவாச மஹாநாயக்க தேரோ அவர்கள் தேசிய, மத சாசன ரீதியில் இலங்கைக்கு ஆற்றிய மெச்சத்தக்க சேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மஹாநாயக்க தேரோ அவர்களின் இறுதிக் கிரியை நடாத்தப்படவுள்ள 2021 மார் மாதம் 25 ஆம் திகதியை துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கும் இறுதிக் கிரியை நடாத்தப்படும் நகர எல்லையினுள் துக்க தினமாக கருதி அன்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் இறைச்சிக்காக மிருகங்கள் கொல்லப்படும் இடங்கள் மற்றும் இறைச்சி, மீன் விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் மதுபான நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் என்பவற்றை மூடுவதற்கும் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.