• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கு நேரடி வௌிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சருவதேச ஊக்குவிப்பு செயற்பாடு
- நேரடி வௌிநாட்டு முதலீடுகள் பொருளாதார அபிவிருத்தியினைத் தீர்மானிக்கும் சாதகமான காரணியாக இருந்தாலும் கடந்த பல வருடங்களாக முதலீட்டாளர்களை நேரடியாக இலக்காகக் கொள்ளக்கூடிய திறமுறைகள் இனங்காணப்படாததன் காரணமாக நேரடி வௌிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுக்கும் செயற்பாடு பின்னடைந்துள்ளது. இலங்கையினாலும் போட்டி நாடுகளினாலும் மிக உயர்ந்த நேரடி வௌிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு கடந்த காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும் இலங்கைக்கு 2019 ஆம் ஆண்டில் பெற்றுக்கொள்ள இயலுமான நேரடி வௌிநாட்டு முதலீட்டின் அளவு 1.5 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் மாத்திரமேயாகும். ஆதலால், முதலீடுகள் சார்பில் பொருத்தமான அனுசரணை நாடொன்றாக இலங்கையை காட்டும் விதத்தில் முறையாக திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைந்த, மையப்படுத்தப்பட்ட சந்தைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் மூலோபாயத்தை நடைமுறைப்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதன் பொருட்டு நேரடி வௌிநாட்டு முதலீட்டினை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு நல்கும் உயர் சருவதேச மதியுரை கம்பனியொன்றின் சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.