• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய விளையாட்டுத் தினத்தினை பிரகடனப்படுத்தல்
- ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 06 ஆம் திகதி இலங்கையின் தேசிய விளையாட்டுத் தினமாக பிரகடனப்படுத்துவதற்கு 2014 யூலை மாதம் 10 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆயினும், ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதியளவில் நாட்டில் உள்ள விழாக்காலம் மற்றும் புதுவருட ஆயத்தங்கள் காரணமாக இந்த திகதியின்பால் பெருமளவு மக்களின் கவனத்தினைப் பெறுவது கடினமானதாகும். விளையாட்டுத் தினத்தினை பிரகடனப்படுத்துவதன் மூலம் விளையாட்டு வீரர்களுக்கும் அதேபோன்று பொதுமக்களுக்கும் விளையாட்டு பற்றிய புரிந்துணர்வும் விளையாட்டுக்கான விருப்பமும் உருவாக வேண்டுமென்பதனால் தேசிய விளையாட்டுத் தினமாக பிறிதொரு பொருத்தமான திகதியினை பிரகடனப்படுத்தும் தேவை விளையாட்டுத்துறை சார்ந்த பல்வேறுபட்ட குழுக்களினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த விடயங்களைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இலங்கைக்கு நற்பெயரை ஈட்டித் தந்த திரு.டங்கன் வைட் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் வௌ்ளிப் பதக்கம் வென்ற யூலை மாதம் 31 ஆம் திகதியை தேசிய விளையாட்டுத் தினமாக பிரகடனப்படுத்தும் பொருட்டு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.