• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இளைஞர் தொழில்முயற்சி அபிவிருத்தி நிதியத்தினைத் தாபித்தல்
- புதிய தொழில்முயற்சியாளர்களாக வியாபார துறைக்குள் நுழையும் இளைய தலைமுறையினர் முகங்கொடுக்க நேரிடும் முக்கிய சவாலானது அவர்களுடைய தொழில்கள் சார்பில் முதலீடு செய்வதற்கு போதுமான நிதிவளம் இல்லாமையேயாகும். அதேபோன்று ஏற்கனவே வர்த்தக துறையிலுள்ள இளைய தொழில்முயற்சியாளர்கள் தேவையான நிதிவளங்களைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது. இவை காரணமாக பல்வேறுபட்ட முறைசாரா வழிமுறைகளின் ஊடாக தேவையான நிதிவளங்களைப் பெற்றுக் கொள்வதற்கு இளம் தொழில் முயற்சியாளர்கள் முயற்சிப்பதனால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பது தெரியவந்துள்ளது. 'சுபீட்சத்தின் நோக்கு' அரச கொள்கை பிரகடனத்தின் மூலம் இளைஞர் அபிவிருத்தி நிதிய மொன்றினை ஆரம்பிப்பதற்கும் இந்த நிதியத்தை மேம்படுத்துவதற்கு இளைஞர் அபிவிருத்தி லொத்தர் ஒன்றை ஆரம்பிப்பதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த நிதியத்தை பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் தாபிப்பதற்கும் இதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.