2021-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
COVID - 19 தொற்று நிலைமை காலப் பகுதியில் கல்வி முறைமையின் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டினை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு வானொலி ஒலிபரப்புச் சேவைகளின் ஒத்தாசையினைப் பெற்றுக் கொள்ளல் - COVID - 19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தடையின்றி நடாத்திச் செல்வதற்காக தரம் 3 இலிருந்து தரம் 13 வரையிலான பாடத் திட்டங்களைத் தழுவி 'ஐ அலைவரிசை' மற்றும் 'நேத்ரா அலைவரிசை' என்பவற்றின் ஊடாக 'குரு கெதர' கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் ஔிபரப்பப்படுகின்றன. இதற்கிணங்க, தற்போது தொலைக்காட்சிகள் மூலம் ஔிபரப்பு செய்யப்படும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் தழுவப்படாத பிரதேசங்களுக்கு வானொலி ஒலிபரப்புச் சேவைகளை பயன்படுத்துவது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. வானொலி அலைவரிசைகள் மூலம் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் ஒலிபரப்பப்படும் போது வானொலி மூலமும் திறன் தொலைபேசிகள் மூலமும் இந்த நிகழ்ச்சித் திட்டங்களை கேட்கும் வாய்ப்பு உள்ளமையினால் அதிகமான மாணவர்களுக்கு இந்த கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை கேட்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறும். இதற்கிணங்க, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய ஒலிபரப்பு அலைவரிசை மற்றும் பிராந்திய ஒலிபரப்பு அலைவரிசை என்பவற்றின் ஊடாக இத்தகைய கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை ஒலிபரப்பும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |