2021-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் நன்னீர் நீர்நிலைகளில் பெரிய இறால் மற்றும் 'Finfish' வகை இன மீன்களின் நிலையான மற்றும் வினைத்திறன் மிக்க வளர்ப்பினை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல் - இலங்கையில் நன்னீர் பெரிய இறால் வளர்ப்பு உயர் பயனுள்ள வர்த்தகமொன்றாக விருத்தி செய்து கிராமிய மீன்பிடி சமூகத்திற்கு நலன்களை வழங்கக்கூடிய துறையொன்றாக இனங்காணப் பட்டுள்ளது. இந்த இறால் குஞ்சுகளை நன்னீர் நிலைகளுக்கு விஞ்ஞான ரீதியில் விடுவிக்கப்படாமையினால் இதன் பொருட்டு விஞ்ஞான ரீதியிலான பரிசோதனையொன்றை மேற்கொள்வது பொருத்தமானதெனக் கண்டறியப் பட்டுள்ளது. இலங்கை வயம்ப பல்கலைக்கழகம், ருகுணு பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய நீரகவள மூலங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகவராண்மை (NARA) என்பன அவுஸ்திரேலியாவின் James Cook பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆராய்ச்சிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்குரியதாக நிறுவனங்களுக்கிடையில் ஆராய்ச்சி உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதற்கும் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |