2021-03-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சந்தைக்கு போதுமான அளவு அரிசி தொகையினை வழங்குதல் - கட்டுப்பாட்டு விலையின் கீழ் தற்போது சந்தையில்போதுமான அளவு அரிசி கையிருப்பு இல்லாமை பற்றி அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதோடு, அதன் பொருட்டு எடுக்கக்கூடிய மாற்று வழிகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. இதற்கிணங்க, முதலில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல் தொகையினை அரிசியாக்கி தொடர்ச்சியாக சதொச நிறுவனத்தின் கிளைகள் ஊடாக துரிதமாக வழங்குவதற்கும் இந்த வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மேலும் எடுக்கக்கூடிய மாற்று வழிகள் தொடர்பில் பரிசீலனை செய்வதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. |