• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கல்வி அமைச்சுக்கும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர் கல்வி ஆணைக்குழுவுக்கும் இடையில் உயர் கல்வி துறை ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- இரு நாடுகளினதும் கல்வித் துறை சார்ந்த பரஸ்பர ஒத்துழைப்பினை பலப்படுத்துவதற்கும் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் உயர் கல்வித் துறையில் கல்வி மற்றும் விஞ்ஞான அறிவினை பரிமாறும் புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டமொன்றை ஐந்து (05) வருட காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கல்வி அமைச்சுக்கும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர் கல்வி ஆணைக்குழுவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் குறித்த காலப்பகுதிக்குள் பாகிஸ்தான் அரசாங்கமானது 800 முழுமையான புலமைப்பரிசில்கள் மற்றும் ஆரம்ப பட்டப்படிப்பு பாடநெறிக்கான கட்டணம் விலக்களிக்கப்பட்ட 200 பகுதி புலமைப்பரிசில்கள் என 1,000 புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. அதேபோன்று ஆராய்ச்சி, மாநாடுகள் மற்றும் ஏனைய கல்வி நடவடிக்கைகளுக்காக இலங்கை / பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களின் 50 பீட உறுப்பினர்களை இருநாடுகளினதும் பல்கலைக்கழகங்களுக்கிடையில் குறித்துரைக்கப்பட்ட கால பகுதிக்கு பரிமாறிக் கொள்வதற்கும் இதன் கீழ் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.