2021-03-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டு உற்பத்திகளை வௌிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பும் பொருட்டு புதிய கம்பனியொன்றைத் தாபித்தல் - பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் எண்ணக்கருவின் மீது வௌிநாடுகளில் கண்காட்சி நிலையங்களைத் தாபித்து அந்த நாடுகளில் தெரிவுசெய்யப்பட்ட முகவர்களின் ஊடாக சருவதேசத்தில் பலம் மிக்க வர்த்தக வலையமைப்பொன்றை உருவாக்கி இலங்கை உற்பத்தியினை மேம்படுத்துவதற்கு முதன்மை நிறுவனமொன்றைத் தாபிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த நோக்கம் கருதி லங்கா சலுசல கம்பனியின் 100 சதவீத பங்குரிமை கொண்ட கம்பனியொன்றாக புதிய கம்பனியொன்றைத் தாபிப்பதற்கும் இந்த கம்பனியினால் நியமிக்கப்படும் வௌிநாட்டு முகவர்கள் மற்றும் கண்காட்சி நிலையங்கள் ஊடாக பத்திக் உற்பத்திகள், கைத்தறி துணி உற்பத்திகள், உள்நாட்டு ஆடை உற்பத்திகள் அடங்கலாக பிற உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்துவதற்குமாக கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |