2021-03-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முன்பிள்ளை பருவ கல்வி பற்றிய முகாமைத்துவம் மற்றும் ஒழுங்குறுத்தல் தேசிய குழுவை நியமித்தல் - நடைமுறையிலுள்ள சட்ட கட்டமைப்புக்கு அமைவாக இலங்கையில் முன்பிள்ளை பருவ கல்வி முறை மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைக்கும் உரிய நிறுவனங்கள் பலவற்றின் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றதோடு இந்த துறையின் தரங்களை தேசிய மட்டத்தில் பேணும் மற்றும் மேற்பார்வை செய்யும் செயற்பாட்டினை பலப்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, முன்பள்ளிகள், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி நிலையங்கள், பகல் பொழுது பராமரிப்பு நிலையங்கள் என்பன சம்பந்தமாக தேசிய மட்டத்தில் ஒழுங்குறுத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் வழிகாட்டுவதற்குமாக உரிய துறைகளைச் சார்ந்த நிபுணர்களையும் தீர்மானங்களை எடுக்கும் உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கிய 'முன்பிள்ளை பருவ கல்வி பற்றிய முகாமைத்துவம் மற்றும் ஒழுங்குறுத்தல் தேசிய குழு' என்னும் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |