2021-03-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை அதிபர்கள் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - தற்போது இலங்கை அதிபர்கள் சேவையின் I ஆம் II ஆம் III ஆம் தரங்களில் சுமார் 4,600 வெற்றிடங்கள் நிலவுகின்றதோடு, தற்போது நாட்டில் நிலவும் COVID தொற்றுநிலைமையின் கீழ் போட்டி பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையினை நடாத்தி முறையான நியமனங்களை வழங்குவதற்கு ஒரு வருடத்தைவிட கூடுதலான காலம் செல்லுமென அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, நீண்ட காலமாக அதிபர் பதவிகளில் பதில் கடமையாற்றும் / கடமைகளை நிறைவேற்றும் இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த தகைமை பெற்ற உத்தியோகத்தர்களுக்கும் சேவை பிரமாணக்குறிப்புக்கு அமைவாக தகைமை பெறும் ஆசிரியர் சேவையைச் சேர்ந்த ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் வாய்ப்பு வழங்கி இம்முறை மாத்திரம் வரையறுக்கப்படும் விதத்தில் போட்டி பரீட்சை நடாத்துவதற்குப் பதிலாக கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையொன்றை நடாத்தி பொருத்தமானவர்களை தெரிவுசெய்து இலங்கை அதிபர்கள் சேவையின் III ஆம் தரத்திற்கு நியமனம் செய்யும் பொருட்டுத் தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |