2021-03-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தண்டனைச் சட்டக்கோவையின் 285, 286 மற்றும் 286அ ஆம் பிரிவுகளை நீக்குதல் - ஆபாச வௌியீடுகளை தடை செய்யும் சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக 2020 செப்ரெம்பர் மாதம் 29 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டதும் 1927 ஆம் ஆண்டின் ஆபாச வௌியீடுகள் கட்டளைச்சட்டமானது நீக்கப்படும். அதேபோன்று இந்த சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டதும் தண்டனைச் சட்டக்கோவையின் 285, 286 மற்றும் 286அ ஆம் பிரிவுகளையும் நடைமுறைப்படுத்தும் தேவையும்கூட எழமாட்டாது. இதற்கிணங்க, தண்டனைச் சட்டகோவையின் குறித்த பிரிவுகளை நீக்குவதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |